பயணிகளின் கவனத்துக்கு... இந்த மார்க்கத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரத்து!

By காமதேனு

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 3 நாட்கள் குருவாயூர் எக்பிரஸ் ரயில் சேவை எர்ணாகுளம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

ரயில் சேவையில் மாற்றம்

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 4, 11 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த 3 நாட்களில் மட்டும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE