ரயிலில் தவறவிட்ட வைரத்தோட்டை உரியவரிடம் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு

By என்.சன்னாசி

மதுரை: தாம்பரம் - செங்கோட்டை மும்முறை சேவை ரயிலில் கண்டெடுக்கப்பட்ட வைரத்தோடு உரிய பயணியிடம் செங்கோட்டையில் ஒப்படைக்க உதவிய டிக்கெட் பரிசோதருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமும் செங்கோட்டையை சென்றடையும் மும்முறை சேவை ரயில் தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (மே 23) இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் மதுரை கோட்டம் செங்கோட்டை பிரிவைச் சேர்ந்த பயணச்சீட்டு பரிசோதகர் டி. கார்த்திகேயன் பணியில் இருந்தார். அவர் ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு செங்கோட்டை சென்றடைந்தபோது, அந்த ரயிலில் பயணி தவறவிட்டு சென்ற வைரத் தோட்டை கண்டெடுத்தார்.

அந்த வைரத்தோட்டை செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளிடம்,சமர்பித்து, தவறவிட்ட பயணியிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார். டிக்கெட் பரிசோதகரின் இந்த நேர்மையான செயலைச் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE