ஓணம் பண்டிகை... வரும் 29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்!

By காமதேனு

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி செவ்வாய் அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்த உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வார விடுமுறை விடப்படுவதால் அன்றைய தினம் பூங்கா இயங்காது.

இந்நிலையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 29 அன்று ஓணம் பண்டிகை கொண்டாப்படுகிறது. அன்றைய தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வார விடுமுறை நாளான செவ்வாய் கிழமை அன்று பூங்கா இயங்கும் என அதன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE