காவல் நிலையம் வந்த கரடி... கூடலூர் போலீஸார் அதிர்ச்சி!

By காமதேனு

கூடலூர் நகர காவல் நிலையத்திற்குள் நள்ளிரவு வேளையில் கரடி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகர காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு வேளையில் கரடி ஒன்று புகுந்துள்ளது. காவல் நிலையம் முன்பிருந்த தடுப்புச் சுவரை தாண்டி கரடி காவல் நிலையத்திற்குள் நுழைவதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இதனை தனது செல்போனில் படம் பிடித்ததுடன், காவல் நிலையத்தில் இருந்த போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரவு பணியில் இருந்த போலீஸார், சத்தம் எழுப்பியபடி கரடியை விரட்டினர். இதனால் அச்சம் அடைந்த அந்த கரடி காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE