மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

By KU BUREAU

திண்டுக்கல்: மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அச்சிறுவனின் உடலுக்கு அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் பழனிச்சாமி மகன் கிஷோர்(11). இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இறந்த சிறுவனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உடல் உறுப்புகள்தானம் செய்யப்பட்டன. பெரியகோட்டையில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் ஆட்சியர் பூங்கொடி கலந்துகொண்டு சிறுவனின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE