தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: தேசிய ஊட்டச்சத்து வாரத்தையொட்டி கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை சார்பில் இன்று (செப். 2ம் தேதி) விழிப்புணர்வு பேரணி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்து பேரணியில் பங்கேற்றார். கல்லூரியில் தொடங்கிய பேரணி, கரூர் மில் கேட் வரை சென்று மீண்டும் திரும்பி கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.

பேரணியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE