நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி... தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!

By காமதேனு

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160ஆக விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்கும் வேளையில் தங்கம் இன்று திடீரென உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,615 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 44,920 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் 5,645 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,160 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6,115 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 48,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.77.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE