அரியலூர் ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்!

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதன்கிழமை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று உபகரணங்களை பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, நகர்மன்றத் தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE