பயணிகளுக்கு குட்நியூஸ்... மதுரை - கச்சக்குடா ரயில்சேவை நீட்டிப்பு!

By காமதேனு

மதுரை கச்சக்குடா இடையேயான சிறப்பு ரயில் சேவை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மதுரை நகரில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள கச்சக்குடா நகருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-கச்சக்குடா இடையேயான வாராந்திர ரயில்

இதன்படி, “கச்சக்குடாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 08.45 மணிக்கு, இந்த ரயில் மதுரை வந்து சேரும். கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) பிப்ரவரி 5 முதல் மார்ச் 25 வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் காலை 07.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும். மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் (09172) பிப்ரவரி 7 முதல் மார்ச் 27 வரை இயக்கப்படும்.

மதுரை-கச்சக்குடா இடையேயான வாராந்திர ரயில்

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... இனி கணவருக்கு இல்லை பென்ஷன்... குழந்தைக்குத் தான்!

நிர்மலா சீதாராமனை பதவி நீக்க கோரிய ஐஆர்எஸ் அதிகாரி சஸ்பெண்ட்... நாளை ஓய்வு பெறும் நிலையில் நடவடிக்கை!

நாளை கடைசி தேதி... செல்போனைத் தொடாமல் இருந்தால் ரூ.8.31 லட்சம் பரிசு... பிரபல நிறுவனம் போட்டியில் பங்கேற்க அழைப்பு!

பழிக்குப் பழியாக பாஜக பிரமுகர் கொலை... 15 பேருக்கு மரண தண்டனை: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தங்க ரதத்தில் ஒரு வெள்ளி நிலவு... குடும்பத்துடன் பவதாரிணி எடுத்த கடைசி புகைப்படம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE