குட்நியூஸ்... கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க முடிவு!

By காமதேனு

விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தமிழக அரசிடம் திட்ட அறிக்கை கொடுத்துள்ளதாக மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் முறை

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணச்சீட்டு பெற்றுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கும் விதமாக சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ் ஆப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.

வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் முறை

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மெட்ரோ ரயில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு ஜி.பே, பேடிஎம் ஆன்லைன் மூலமாக டிக்கெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ் அப் மூலமாக பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ்அப் மூலமாக பயணச்சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இங்கும் பொதுமக்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும், "நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் பேப்பர் பயணச்சீட்டு அளித்து வரப்படுகிறது. அதைக் குறைக்கும் விதமாக வாட்ஸ் அப் மூலம் பயணச் சீட்டு பெறும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும்" என்றார்.

"கிளாம்பக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் விரிவாக்கம் செய்யப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தல் பின் விரைவில் அதற்கான பணிகள் தொடக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கிலோ 15 ரூபாய் தான்... சின்ன வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி: வியாபாரிகள் கண்ணீர்!

உயிரிழந்த எஜமானி... சுடுகாடு வரை சென்று பாசப்போராட்டம் நடத்திய நாய்!

ஏஐ படைப்பில் ராமாயணம்... இணையத்தை தெறிக்க விடும் டிஜிட்டல் ரகளை

ச்சோ க்யூட்... வளைகாப்பு விழாவில் கணவருடன் சேர்ந்து நடனமாடிய நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!

அதிர்ச்சி... சக வீரர்கள் 6 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பாதுகாப்பு படைவீரர் தற்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE