குட் நியூஸ்... பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி; மாநில அரசு அறிவிப்பு!

By காமதேனு

மகாராஷ்டிராவில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது மகாராஷ்டிர மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டுகளை வைத்துள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தை

இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தால் முதலில் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அதன் பிறகு ஒன்றாம் வகுப்பில் சேரும்போது 6 ஆயிரம் ரூபாய், ஆறாம் வகுப்புக்கு செல்லும்போது 7000 ரூபாய், ஒன்பதாம் வகுப்பில் எட்டாயிரம் ரூபாய், இறுதியாக குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகின்றது. இதனை பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE