சென்னை - எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஓவிய சந்தை தொடக்கம்

By KU BUREAU

சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ள ‘ஓவியச் சந்தை’ நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தின் திறந்தவெளி அரங்கில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஓவிய சந்தையில் 100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவான வாட்டர் கலர்,கேன்வாஸ், ஆயில் கலர், அக்ரலிக், மிக்சர் மீடியா, பென்சில், பிரிண்ட் மேக்கிங் ஓவியங்கள், சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 3 நாள் ஓவியச் சந்தை நிகழ்ச்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்து, படைப்புகளை உருவாக்கிய கலைஞர்களுடன் கலந்துரையாடி பாராட்டு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE