புதிய நாவல்... புதுமையான அறிமுகம்: கவனம் ஈர்க்கும் கபிலன் வைரமுத்து!

By காமதேனு

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, தான் எழுதியிருக்கும் புதிய நாவலைப் புதுமையான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து, ‘உலகம் யாவையும்’, ‘என்றான் கவிஞன்’ என்பன உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியவர். ’உதயம் என்ஹெச்4’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட படங்களுக்குப் பாடல் எழுதியதுடன், ’கவண்’, ‘விவேகம்’, ‘தள்ளிப்போகாதே’ போன்ற படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியவர். ‘பூமராங் பூமி’, ‘உயிர்ச்சொல்’ போன்ற நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில், புதிய நாவல் ஒன்றைத் தற்போது எழுதிவருகிறார். அதை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின்னட்டைப் படத்தைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவு இது:

‘நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம். நிழல்வெளியாக இருக்கும் இணையவெளி நவீன நிலவுடைமைச் சமூகமாக தன்னைக் கட்டமைத்துவருகிறது. Digital Feudalism என்று ஆங்கில அறிஞர்கள் அழைக்கும் நிழலுடைமை ஆதிக்கத்திற்கு நம் தரவுகளின் பரிமாற்றமே எரிபொருளாக இருக்கிறது. வெளிவரவிருக்கும் என் நாவல் நிழலுடைமைத்துவம் குறித்த ஒரு மாய வேடிக்கை.

ஒரு புத்தகத்தை அதன் தலைப்பில் இருந்தும் அட்டைப் படத்தில் இருந்தும் அறிமுகம் செய்வது வழக்கம். என் புத்தகத்தின் பின் அட்டையாக அமைந்திருக்கும் இந்த ஓவியத்தில் இருந்து என்அறிமுகத்தைத் தொடங்குகிறேன். நண்பர் ஹாசிப்கான் வரைந்திருக்கும் இப்படம் கதையில் வரும் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறித்தாலும் எக்காலத்திற்குமான குறியீடாக இது அமைந்திருக்கிறது.

நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று நீண்ட நாட்கள் யோசித்து ஒரு பெயர் கிடைத்தது. பல நூற்றாண்டு கால தூசு தட்டி அதை அச்சில் ஏற்றியிருக்கிறோம்.

வருகிற திங்கள் காலை 10:30 மணிக்கு நூலின் தலைப்பும் - முகப்பும் - வெளியீட்டு தேதியும்…’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE