கமுதி
சந்தைப்பேட்டை அருகே இரு பெண்கள்...
“திமுக பொதுக்கூட்டத்துக்குப் போறவங்களுக்குக் காசு தர்றாங்களாம்... நீயும் வர்றியா?”
“ம்... அந்த ஆயிரம்தான் இன்னும் வரலை. இந்த இருநூறை எதுக்கு விடுவானேன்! இரு நானும் வர்றேன்.”
(அருகில் நிற்பவர்கள் சிரிக்கிறார்கள்)
- எம்.கல்லூரி ராமன்,
கரிசல்புலி
தஞ்சை
மருத்துவக் கல்லூரி சாலையில் டீக்கடை ஒன்றில்...
“அதான் கூட்டமே இல்லையே, எதுக்குப்பா டோக்கன் வாங்கச் சொல்றே?"
“திடீர்னு கூட்டம் வரும் சார்... சில ஃப்ராடு பசங்க அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி நைஸா எஸ்கேப் ஆயிடறானுக.”
“என்னைப் பார்த்தா உனக்கு ஃப்ராடு மாதிரியா தெரியுது..?”
“நடப்பைச் சொன்னா நம்மகிட்டேயே சண்டைக்கு வர்றீங்களே... டோக்கனை வாங்கி டீ குடிங்க பாஸ்!”
(டீ குடிக்க வந்தவர் விறுவிறுவென நடையைக் கட்டுகிறார்)
- வி.ரேவதி,
தஞ்சை
கள்ளக்குறிச்சி
ஓட்டல் ஒன்றில்...
“என்னப்பா சட்னியோட இட்லி ஒட்டக்கூட மாட்டேன்னு அடம் பிடிக்குது?”
“இது முதல்வர்-கவர்னர் இட்லி - சட்னிப்பா... ஒண்ணோட ஒண்ணு ஒட்டாது.”
“அப்ப கை கழுவிட வேண்டியதுதான்!”
- மணிவண்ணன்.ச,
சங்கராபுரம்