சென்னை: தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் 2008-ம் ஆண்டு முதல் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் 2008-ம் ஆண்டு முதல் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இவ்வாரியத்தின் தலைவராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பனும், துணைத் தலைவராக ராசா.அருண்மொழியும் உள்ளார்கள்.
தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தின் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ் கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவை, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை , கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை,, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள் பெற தகுதியுடையவர்கள்
i) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள்
ii) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள்
iii) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோர்)
இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் உறுப்பினர்களாக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
லைஃப்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
லைஃப்
9 hours ago