திருச்சி
டாஸ்மாக் ஒன்றில்...
“யோவ்! முதல் ஆளா வந்துட்டு வெட்கமே இல்லாம கடன் சொல்றியே... நியாயமா இது?”
“அட! 500 ரூபாயோட தான் வந்தேன். மாஸ்க் போடலைன்னு அபராதமா அதைப் புடுங்கிட்டாங்க.”
“அய்யோ பாவம்!”
“துக்கம் தாங்கலண்ணே... மனசு வெச்சு ஒரு குவார்ட்டராவது கடனா கொடுங்க.”
-சிவம், திருச்சி
தஞ்சாவூர்
மானம்புச்சாவடி டீக்கடை ஒன்றில் இருவர்...
“என்னப்பா... போற போக்கைப் பார்த்தா கரோனா நம்பளவிட்டு போகாது போலிருக்கே. மறுபடியும் இன்னொரு ரவுண்டு வருமோ..?”
“கரோனா ரவுண்டு கட்டுதோ இல்லையோ மாஸ்க் போடலேன்னு போலீஸ் நம்பள ரவுண்டுக் கட்டப்போகுது. விடு பழையபடி மாஸ்க் போட்டு மாஸ் காட்டுவோம்!”
- பா து பிரகாஷ்,
தஞ்சாவூர்
சீர்காழி
ஒரு டீக்கடையில்...
“என்ன மாஸ்டர் டீ, ஒரே கருப்பா இருக்கு... டீத்தூள்ல போட்டீங்களா, இல்லே கரித்தூள்ல போட்டீங்களா?
“இது திராவிட மாடல் டீ... இப்ப இதைச் சொன்னாத்தானே ட்ரெண்ட் ஆகுது!”
“அதுசரி, அப்ப பாஜக மாடல்னா காவிக் கலர்ல தண்ணி கலப்பீங்க அப்படித்தானே?! இனி நான் இந்தப் பக்கம் வந்தா என்னான்னு கேளுங்க!”
(வெடிச் சிரிப்பில் அதிர்கிறது டீக்கடை)
- வி.வெங்கட்,
சீர்காழி