சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநலம்-வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 முதல் 28-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: "தமிழகத்தில் கரோனா பரவல் காலத்தில் வளரிளம் பருவத்தினர் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளனர். அதை ஈடுசெய்து அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும், மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபடவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதை கருத்தில் கொண்டு 2022 - 23, 2023 - 24 ஆகிய கல்வியாண்டுகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான ( 2024 - 25 ) பயிற்சி ஆசிரியர்களுக்கு இணையவழியில் தொடங்கியது. இந்த பயிற்சியானது நாளை மறுநாள் ( ஜூன் 22 ) வரை மண்டல வாரியாக வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர் மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக ஜூன் 24 முதல் 28-ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்காக மாணவர்களுக்கான மின்னுருவாக்கம் செய்யப்பட்ட கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
ஸ்பெஷல்
39 mins ago
ஆன்மிகம்
50 mins ago
ஸ்பெஷல்
1 hour ago
க்ரைம்
23 mins ago
ஸ்பெஷல்
1 hour ago
ஸ்பெஷல்
1 hour ago
க்ரைம்
39 mins ago
சினிமா
1 hour ago
ஸ்பெஷல்
1 hour ago
வைரல்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago