தமிழிசை- ரோஜா கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்

By காமதேனு

உலக மகளிர் தினத்தையொட்டி தெலங்னாகா ஆளுநர் தமிழிசை, நடிகையும் நகரி எம்எல்ஏவுமான ரோஜாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

உலக மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகளிர் தினத்தையொட்டி நகரி எம்எல்ஏ ரோஜாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செந்தரர்ராஜன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ரோஜா, ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனுக்கு இன்று சென்றார். அப்போது, நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் ரோஜாவும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE