எல்லாரும் எவிக்‌ஷன்... ஏக டென்ஷனில் கமல்!

By காமதேனு

சானா
readers@kamadenu.in

காலை எழுந்தவுடன் கடுப்புடன் இருந்தான் பாச்சா. வழக்கம்போல பறக்கும் பைக் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயே பறந்து சென்றிருந்தது. “வரட்டும் பேசிக்கிறேன்” என்று கறுவிக்கொண்டிருந்த பாச்சாவின் முன்னே வாகாக வந்து நின்றது பைக். “தூங்கும்போது இப்படி என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஏம்ப்பா இப்படி இம்சை பண்றே?” என்று எகிறினான் பாச்சா. “அட என்னய்யா நீ!? முழிச்சிட்டு இருக்கும்போதே மொத்தமா கட்சியைவிட்டு போறவங்களைப் பார்த்துட்டு கலங்காம இருக்காரே ‘களை’ஞானி. அவரைப் பார்த்தாவது பொறுமையைக் கத்துக்கோ” என்று சிரித்தது பைக்.

“அதுவும் சரிதான். அவரைத்தானே மொதல்ல பார்க்கப் போறோம். கத்துக்கிட்டா போச்சு” என்று பதிலுக்குப் பல்லைக் காட்டினான் பாச்சா.

‘அரண்மனை’ பட செட் போல, ஆளரவமின்றி கிடந்தது ஆழ்வார்பேட்டை அலுவலகம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE