பெருந்தலைவர் கமலின் எலெக் ஷன் செலக் ஷன்!

By காமதேனு

சானா
readers@kamadenu.in

ஆழ்வார்ப்பேட்டை. கையில் சாட்டையுடன் கட்டுக்கோப்புடன் தொகுதிப் பங்கீடு செய்துகொண்டிருக்கிறார் கமல். தோழமைக் கட்சிகள், துணைக்கு வந்தவர்கள், காய்கறி வாங்க தெருவைக் கடந்தவர்கள் என எல்லோரும் ஓர் அறையில் அடைத்துவைக்கப் பட்டிருக்கிறார்கள். தொகுதிப் பெயர்கள் எழுதப்பட்ட பட்டியலை வாசித்து, திசைக்கொருவரை வேட்பாளராக அறிவித்து திடுக்கிடச் செய்கிறார்கள் மநீம நிர்வாகிகள். எங்கும் மரண பீதி. அப்போது நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டு, கையெழுத்துப் போடுமாறு மிரட்டப்படும் முகங்களில் ஒன்று க்ளோஸ்-அப்பில் தெரிகிறது. பார்த்தால்… அது பாச்சா!

….வீறிட்டு அலறியபடி விழித்தெழுந்தது, பறக்கும் பைக். என்னமோ ஏதோ என்று பதறியபடி ஓடிவந்த பாச்சா, விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தான்.

“இதுக்குத்தான் குன்ஸாவா நடக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தையையெல்லாம் பார்த்து குழம்பாதேன்னு சொன்னேன். கேட்டியா? இப்ப திகில் கனவெல்லாம் கண்டு அலறிட்டு இருக்கே” என்று சொன்ன பாச்சாவைப் பரிதாபமாகப் பார்த்த பைக், “கமல் கட்சிக்காரங்கள்கிட்ட மாட்டி நீ கதறுன கதறலை நினைச்சா எனக்கே கண்ணீர் வருது. நீ சிரிக்கிறியா?” என்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE