ஆட்டி வைக்கிறீங்களே  அம்மிணி..!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மளிகை சாமான் மூட்டையை, சுமக்க முடியாம தூக்கிக்கிட்டு படியேறி வந்து கீழே வச்சுட்டு மூச்சு வாங்கினேன். கடைக்காரரே டோர் டெலிவரி தரேன்னு சொன்னாலும் அம்மிணி கேட்க மாட்டாங்க. ஏதோ அவ்வளவு சாமானும் இன்னிக்கே சமைக்கப் போறாப்ல ஒரு பில்டப்பு.

அம்மிணி உடனே பரபரப்பாகிட்டாங்க. மகனாரைக் கூப்பிட்டு ஏதோ சொல்லவும் அவர் சலிச்சுக்கிட்டே போனார். என்னவா இருக்கும்னு மூளை பிறாண்டினாலும் பூனை எப்படியும் வெளியே வந்துதானே தீரும்னு அமைதியா இருந்தேன்.

மகனார் திரும்பிட்டார். அவர் கையில் ஒரு பெரிய டப்பா. பீட்ஸா டைப்ல. “என்னடா அது”ன்னு கேட்டேன். கீழே வச்சு பிரிச்சார். எடை பார்க்கிற மெஷின்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE