கனவுல குறுக்க வந்தா... கவுண்டமணியா மாறிடுவேன்!- கடுப்புடன் கர்ஜித்த சீமான்

By காமதேனு

சானா
readers@kamadenu.in

சென்னையில் நினைவிடச் சுற்றுலாவுக்கு வந்துவிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்களின் சமாதிகளையும் தரிசித்துவிட்ட திருப்தியில் மெரினாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர் அதிமுகவின் கிளை, வேர், விழுது நிர்வாகிகள். காணும் பொங்கல் அன்று காணாத கூட்டத்தைக் கண்டுவிட்ட திருப்தியில் கடல் அலையும் அவ்வப்போது கரையைத் தொட்டுவிட்டு களிப்புற்றுக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்து இன்புற்றவாறு பைக் மீது பறந்துகொண்டிருந்தான் பாச்சா.
அவனது ஆனந்தத்துக்கு அணை போடும் வகையில் படக்கென்று பட்டியலை எடுத்து நீட்டியது பைக். பயந்தது போலவே, முதல் இடத்தில் இருந்தது… சீமானின் பெயர்.

‘யாரை நம்பி நான் பொறந்தேன்… போங்கடா போங்க’ எனும் பாடலைக் கேட்டவாறு போர்ட்டிகோவில் தியானத்தில் அமர்ந்திருந்தார் நாதக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘இனியும் ஒருங்கிணைக்கிறதுக்குக் கட்சியில யார் இருக்கா? பேசாம விக்ரம் பிரபுவை வச்சு, ‘பாஞ்சாலங்குறிச்சி-2’ எடுத்தா என்ன? எத்தனை நாள்தான் ‘குக்கு வித் கோமாளி’ பாணியில அடுப்படி அரசியல் செய்றது?’ என்று அவரிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது மைண்ட் வாய்ஸ்.

அந்த நேரம் பார்த்து அங்கே ஆஜரான பாச்சா, “உங்க முன்னாள் தம்பிகள், உடன்பிறப்பாகவும், ரத்தத்தின் ரத்தமாகவும் உறைவிடம் தேடி ஓடிட்டு இருக்காங்க. நீங்க வேதனையே படாம வேட்பாளர்களை அறிவிச்சிட்டு இருக்கீங்களே…” என்றான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE