பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

திருப்பூர்

குழாயடியில் இரு பெண்கள்...
“ரேஷன் கடையில டோக்கன் வாங்கும்போது ‘எங்க வீட்ல நாலு ஓட்டு இருக்குது'ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்!”
“யக்கோவ்! இந்தப் பணம் பொங்கலுக்காகக் குடுக்கிறாங்க. நீ பாட்டுக்கு எதையாச்சும் உளறிவச்சு கிடைக்கிற 2,500 ரூபாய்க்கும் வேட்டு வச்சிடாதே!”
- சாரதி, திருப்பூர்

திருச்சி

சமயபுரம் கோயிலில் ஒரு தம்பதி...
“உன் தங்கச்சிக்கு ஏன் திடீர்னு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க?”
“சனிப்பெயர்ச்சி வந்திருச்சுல்லங்க, அதான்!”
“சனிப்பெயர்ச்சிக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“உங்களுக்கு ரெட்டைச்சுழி. அதோட இப்ப கண்டச்சனியாம். அதான் உங்க ஜாதகத்துக்குப் பயந்து படக்குனு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.”
“மகளுக்கு ஜாதகம் பாக்காம மருமகன் ஜாதகத்தை ஆராய்ச்சி பண்ணுனாரு பாரு உங்கப்பா. விவரம் தான்!”
- சிவம், திருச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE