கறி விருந்து வச்சிருக்கேன்!- கலவரமூட்டும் கமல்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

நெடு நேரம் நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்ததால் நீண்ட நித்திரையில் ஆழ்ந்திருந்த பாச்சா, நிச்சையாக… ஸாரி அநிச்சையாகக் கண் விழித்தான். “பாச்சாவாகிய நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று அகலக் கொட்டாவி விட்டபடியே அண்ணாந்து பார்த்தான். பரண் மேலே பறக்கும் பைக் பார்ட் பார்ட்டாகப் பிரிக்கப்பட்டுக் கிடந்தது. “கரோனா வந்ததும் வந்துச்சு. காடாறு மாசம் மாதிரி கம்னு கிடக்க வேண்டியதாய்டுச்சு. பயபுள்ளை பல மாசமா வெளியுலகத்தையே பார்க்கலை... பாவம்” என்றபடி பைக்கின் பாகங்களைக் கீழிறக்கி பொருத்த ஆரம்பித்தான். பைக் பழைய நிலையை அடைந்ததும், “அதென்னெய்யா… கமல் கணக்கா கர்ஜிச்சிக்கிட்டே கண்ணு முழிக்கிற… உறக்கத்துலயும் உலக நாயகன் வாய்ஸ் கேட்டுச்சா?” என்றபடி ஒரண்டையை ஆரம்பித்தது.

“அடப்பாவி! இத்தனை நாளும் ஆளு பேச்சு மூச்சில்லாம கிடந்துட்டு, அசெம்பிள் பண்ணின உடனே அலும்பு பண்றியே...” என்றான் பாச்சா சிரித்துக்கொண்டே.

“அதுசரி, இன்னிக்கு லிஸ்ட்டுல யாரு ஃபர்ஸ்ட்டு?” என்று கடமையாற்ற தயாரானது பைக்.
“அதான் ஆரம்பிச்சு வச்சிட்டாரே… அவர் கிட்ட இருந்தே நாமளும் ஆரம்பிச்சிடுவோம்” என்றான் பாச்சா.
கமல் பிக்பாஸ் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்தனர் இருவரும்.
“எதிர்க் கருத்துடையவர்கள் எதிராளிகள் அல்ல என்பதை எத்தனை முறை சொன்னாலும்...” என்று முகத்தை முறுக்கியபடி உறுமிக்கொண்டிருந்தார் கமல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE