நிழற்சாலை

By காமதேனு

விலகும் இருள்

சுவர்க்கோழிகளின் சத்தம் அடங்கி
சாம்பல் பூத்து நிற்கும்
மெல்லிய இருள் போர்த்திய கருக்கலில்
எங்கோ கேட்கும் நாயின் குரைப்பொலிக்கு
ஒருங்கே எழுந்திடும் கூட்ட நாய்களின்
குரைப்புப் பாய்ச்சலிலிருந்து
குட்டிகளைக் காத்திட
காலுக்கடியில் வைத்து
குறுகி நிமிர்ந்து
பாதுகாப்பு இடம் நோக்கி
பயணிக்கும் பன்றியின் தப்பித்தலுடன்
பொழுது விடிந்தது.

- பல்லவிகுமார்

********************

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE