மாடு வாங்கலியோ...  மாடு

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

எனக்கு எதுக்கு அந்த விபரீத ஆசை வந்துச்சோ தெரியலை. நானாத்தான் வம்ப வழக்கம் போல விலைக்கு வாங்கிட்டேன். என்னன்னு கேக்கறீங்களா... ஆரம்பத்திலேர்ந்து சொன்னாத்தானே புரியும்.

ஒரு தேவை வந்துச்சு. போய் பீரோவைத் திறந்து பர்சை எடுத்தா காலி. அவ்ளோதான். சுர்ருன்னு ஏறுச்சு. கொதிச்சுகிட்டே போய் வீட்டம்மிணியைப் பார்த்தேன்.

“இந்த வீட்டுல என்னதான் செலவு ஆவுதுன்னே புரியல. ஒரு அவசரத்துக்குப் பணம் தேடினா பர்சே காலியா கெடக்கு”ன்னேன்.
“எவ்ளோ வெச்சிருந்தீங்கன்னு நினைப்பிருக்கா?”ன்னு பதில் அம்பு விட்டாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE