தமிழ்நாட்டுக்கு இனி தளபதிதான்!

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பைக் மீதமர்ந்து வானுலா சென்றுகொண்டிருந்த பாச்சா, எதிர்த்தாற்போல் வந்த விமானத்தின் ஜன்னலோரத்தில் ஓபிஎஸ் தலை தென்பட்டதும் உற்சாகமடைந்தான். ஆரவாரமான அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு துள்ளலுடன் திரும்பி வந்துகொண்டிருந்த துணை முதல்வரைக் கண்டதால் விறுவிறுப்படைந்திருந்த பாச்சா, ஓபிஎஸ் வந்த விமானத்துடன் ஒன்றாகத் தரையிறங்கி, அவரைப் பின்தொடர்ந்து அரக்கப்பரக்க ஓடினான்.

ஓபிஎஸ்ஸின் விமானத்துடன் ஒரு குட்டி விமானமும் தரையிறங்கியதை அப்போதுதான் பார்த்தான். சரக்கு விமானமான அதில், ஓபிஎஸ்ஸும், ரவீந்திரநாத்தும் அமெரிக்க மண்ணில் அணிந்து மகிழ்ந்த ஃபேன்சி ரக ஆடைகள், அமெரிக்க அன்பர்கள் அளித்திருந்த அளவற்ற விருதுகள் ஏற்றப்பட்டிருந்தது பின்னர் தான் தெரியவந்தது.

வந்ததும் வராததுமாய், ரஜினியின் ‘அதிசயப் பேச்சை’ சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆத்திரத்துடன் பதிலளித்து அங்கிருந்து நகர்ந்த ஓபிஎஸ், பாச்சாவைப் பார்த்ததும் பன்மடங்கு கடுப்பாகி வேகமாக நடக்கத் தொடங்கினார்.
விடாக்கண்டனான பாச்சா, “சார்… வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமா முடிஞ்சிடுச்சா? அமெரிக்காவுல பெரிய அறுவடையே நடந்திருக்குபோல?” என்று கேட்டபடியே விரட்டிச்சென்றான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE