நிழற்சாலை

By காமதேனு

மண் வாசனை

முகம் காட்டி எழத் துடிக்கும் பயிருக்காக
கருக்கலிலே கழனிக்குச் சென்று
பாதையைச் செப்பனிட்டு
‘சத்தப் பொறு இதோ வந்துட்டேன்ல' என
குனிந்தபடி அதுகளோடு
பலதும் பேசி மகிழ்ந்து
ததும்பத் ததும்ப
நீரோடச்செய்த முனுசாமி தாத்தா
இருபது லிட்டர் மினரல் வாட்டர் கேனை
கேரியரின் பக்கவாட்டில் கிடத்தி
சைக்கிள் டியூபில் இறுகப் பிணைத்து
தட்டுத்தடுமாறி
தார்ச்சாலையோரமாய்
சைக்கிள் தள்ளியபடி
கடந்துசெல்கிறார்
மறக்க இயலா மண் வாசனையோடு!
- துரை.நந்தகுமார்

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை!

அயர்ந்து தூங்கும் விடியல் நேரம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE