நமக்கு இன்னைக்கி ஜாதகத்துல கண்டம்!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

டிவியில யாரோ ஒருத்தர் இந்த ராசிக்கு இன்றைய பலன்னு சொல்லிகிட்டிருந்தார். “அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே...”ன்னு அவர் ஆரம்பிச்சாரு. நம்ம ராசிக்கு இன்னைக்கு என்ன சொல்லப் போறார்னு ஆர்வமா உத்துப் பார்த்தேன். துணைவியார் வந்து நின்னாங்க பக்கத்துல.

“உங்களுக்கு ஜோசியம் ... ஜாதகம் எல்லாம் பாக்கத் தெரியுமா ... தெனம் இந்த ப்ரோகிராம விடாம பார்க்கிறீங்க..?”ன்னு சத்தமா கேட்டாங்க.

“அதுல என்ன சிக்கல்?” என்றேன் வாய்க் கொழுப்புல. “ஜாதகத்த கையில் எடுத்து பிரிச்சுப் பார்க்கணும்... அவ்ளோதானே... படிக்க முடியலேன்னா கண்ணாடி போட்டுக்கணும்”னு சொல்லிட்டு பெரிய ஜோக் சொல்லிட்டதா எனக்கு நானே சிரிச்சுக்கிட்டேன். அவங்க காண்டாகிட்டாங்க. நமக்கு இன்னைக்கி ஜாதகம் கண்டம்னு அப்பவே எனக்கு புரிஞ்சுபோச்சு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE