நிழற்சாலை

By காமதேனு

புதுப் பாதங்களின் பயணம்

கைக்கு எட்டும்படி
இருந்தவை எல்லாம்
உயரே அடுக்கப்படுகின்றன
அலட்சியமாய் விட்டிருந்த
கூர்மையான பொருட்களை
மறைத்து வைத்தாயிற்று
திறந்து கிடக்கும் கதவை
உடனுக்குடன் தாழிடுகிறார்கள்
கீழே சிந்தியவை
தாமதிக்காது
துடைக்கப்படுகின்றன
தரை வழுக்குகிறதா என்று
எல்லோரும்
சோதித்துப் பார்க்கிறோம்
நாள் முழுதும்
விழிப்பாய் இருக்கிறோம்
யாவரும்
நடைபழகத்
தொடங்கிவிட்டாள்
செல்ல மகள்.

– கு.அ.தமிழ்மொழி

பால்யங்களின் வாசனைகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE