நானும் ஃபங்ஷனுக்குப் போறேன்...

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

கூரியர்ல பத்திரிகை வந்துச்சு. நண்பர் தன்னோட மகளுக்குத் திருமணம்னு அனுப்பி இருந்தாரு. செலவு பண்ணி அனுப்பியிருக்காரேனு ஃபீலிங்கோட பிரிச்சா சென்னைல ஃபங்ஷன்.  ‘நேர்ல வந்து அழைச்சதா நெனச்சு அவசியம் வரவும்’னு கூடவே ஒரு துண்டுச் சீட்டும் இருந்துச்சு.  

ஞாயிறுதான் ஃபங்ஷன். லீவு போட வேணாம். நமக்குத்தான் உடனே உணர்ச்சி பீரிட்டுக்குமா...  “ரொம்ப நாள் தோஸ்த்... போகவா..?”ன்னு வீட்டம்மாவைப் பார்த்தேன்.

 ‘ரெண்டு நாளைக்கு இந்த மனுஷனோட தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்’னு பிச்சுக்கிட்டு வந்த மைண்ட் வாய்ஸை மறைச்சுக்கிட்டு, “போயிட்டு பத்திரமா வந்துருங்க”ன்னு ரொம்ப அக்கறையா சொன்னாங்க. என்னவோ சென்னைக்குப் போனதும் என்னை ஆளுங்கட்சி எதிர்க்கட்சில்லாம் ஆள் வெச்சுக் கடத்திட்டுப் போகப் போற மாதிரி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE