வடவன்தான் வடை சுடுறான்!

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

எடுத்த எடுப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரை, அன்றைய பட்டியலில் பார்த்துவிட்ட பைக் பாச்சா தன் வழக்கமான வழக்கத்தின்படி ஏகமாகப் பதறிப்போயிருந்தான்.

வாகன விற்பனைச் சரிவுக்கு ஓலா, ஊபரும் ஒரு காரணம் என்று ஒரு கடும் கண்டுபிடிப்பை முன்வைத்திருக்கும் நிதியமைச்சர் முன்னால், பறக்கும் பைக்குடன் ஆஜரானால் கதி என்னாகுமோ என்ற கவலை நாலாபுறமும் அவனைச் சூழ்ந்திருந்தது. டென்ஷன் குறையாத சூழலிலும், டெல்லிக்குப் பறந்தான் பாச்சா.

பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பழைய நினைப்பிலேயே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மைக்குகளை அவர் முன்னே வைத்துவிட்டு, பத்தடி தூரம் தள்ளி நின்றே கேள்வியை... ஸாரி… அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் நிருபர்கள். மறக்காமல், இந்தியா கேட் பார்க்கிங்கில் பைக்கை விட்டுவிட்டு பாதசாரியாகவே வந்துசேர்ந்தான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE