இல்லி நோடு வைஸு

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

யாரு என்ன சொன்னாலும்... ஸ்பாட்ல போயி பார்த்து எழுதுறதுதானுங்க நம்ம ஸ்டைலு. அப்படி ஒரு தடவ ஸ்பாட்டுக்குப் போறன்டான்னு சொல்லி பட்டுத் திரும்பிய கதைதான் இது!

இருவது வருஷத்துக்கு முந்தி கோயமுத்தூரு பேரூர் பக்கம் ஒரு ஊராட்சித் தலைவரு ஊழல் செஞ்சாருன்னு சொல்லி அவர பதவியவிட்டு தூக்கிருச்சு கோர்ட். அவருக்கு பதிலா உப தலைவர்கிட்ட அதிகாரத்த ஒப்படைக்கணும்னும் உத்தரவு. ஆனா, தலைவரோட பதவி நீக்கத்த ரத்து பண்ணோணும்னு துணைத் தலைவரே ஊர திரட்டிக்கிட்டு வந்து ஆட்சியர் அலுவலகத்துல அதகளம் பண்ணுனாரு.

திண்ணை எப்ப காலியாகும்னு காத்துக்கெடக்குற இந்தக் காலத்துல இதென்னடா ஊரு நாட்டுல கேள்விப்படாத சங்கதியா இருக்கேனுட்டு, ஸ்பாட் ரிப்போர்ட் எடுக்க அந்த ஊருக்கே போனேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE