தொட்டது சனி

By காமதேனு

உத்ரா

வயசாக வயசாக நமக்கு ஞாபகமறதி அதிகமாகிருச்சு. அதுவே நம்மள அப்பப்ப போட்டுத் தாக்குறதுக்கு வீட்டம்மாளுக்கு வசதியாயிடிச்சி. ஏதாச்சும் சொல்லி வாங்கிட்டு வர மறந்துட்டா. "உங்களுக்கு எத்தன தடவ சொல்றது? ஆயிரம் தடவ கடத்தெருப் பக்கம் போறீங்க சொன்னத மட்டும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க... என்னதான் மறதியோ தெரியல. ஆனா, மத்தது எல்லாம் மறக்கமாட்டேங்குது"னு சொல்லுவா.

"மத்ததுன்னா என்ன?"ன்னு கேட்டாக்க,

"இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் நல்லா பதில் பேசக் கத்துக்கிட்டீங்க. இத மட்டும் மறக்காம வச்சிருக்கீங்க. ஆனா, வாங்கியாரச் சொல்றத மட்டும் மறந்துடுங்க”னு ஆடுவா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE