இஞ்சி இடுப்பழகன்!

By காமதேனு

ரிஷபன்

அது எப்படி நிகழ்ந்தது என்று புரியவில்லை. வாளி நிறைய நீர்.  தூக்கி இன்னொரு பக்கம் வைக்கப்போனேன்... வந்தது வினை! முதுகு ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. அடுத்த அடி எடுத்துவைக்க முடியவில்லை.

"அம்மு.. அம்மு" என் மனைவியை அழைத்தேன். சாதாரணமாவே காதில் வாங்கமாட்டாள். பாத்ரூம் கதவு சாத்தியிருந்ததால் நான் கத்தியது உண்மையாகவே அவளுக்குக் கேட்கவில்லை. மெல்லமாய் நகர்ந்து லேசாகக் கதவைத் திறந்துகொண்டு, இடுக்கில் மாட்டிய எலியைப் போல மீண்டும் அபயக் குரல் எழுப்பினேன்.

"என்ன வேணும்" என்றாள் கிச்சனிலிருந்து.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE