நிழற்சாலை

By காமதேனு

கருணை செய்யும்
பெண் குழந்தை

காலண்டர் அட்டையில்
கரத்தை உயர்த்தி கருணை செய்யும்
பெண் குழந்தையொன்றின்
முகம் கவனத்துக்கு வந்துபோக
பெண் குழந்தைகளெல்லாம்
அம்மாவைப் போன்றவர்களென்று
நினைத்துக்கொண்டே
எதிர்ப்பட்ட தங்கை மகள் கன்னத்தை
ஒரு தட்டு தட்டினேன்
இன்றிரவு நிலவை
வரையப் போவதாகச் சொல்கிறாள் அவள்.
- க.சி.அம்பிகாவர்ஷினி

நிவாரணி...

ஆடுகள் தழை தின்னும் அழகில்
மாறிப் போகின்றன
மரமேறி ஒடித்த
காயங்களின் வலிகள்!
- சாமி கிரிஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE