நிழற்சாலை

By காமதேனு

தானா சிக்கும் கூட்டம்

புளுவேல் பூச்சாண்டியிடமோ
முகந்தெரியாத மோமோவிடமோ
சிக்கிக்கொண்டார்கள்,
அரிச்சந்திரன் பிணமெரித்ததையும்
அய்யனார் குதிரையில் வந்ததையும்
கதைகளாகச் சொல்லிட
அம்மாச்சிகளோ தாத்தாக்களோ
இல்லாத வீடுகளின் குழந்தைகள்!
- புதுக்கோட்டை, காசாவயல் கண்ணன்

அன்பின் வலியது உயிர்நிலை!
உடல் பருத்த சிகப்பு பட்டுப்பூச்சியை
ஏர்உழவன் தீப்பெட்டியில்
அடைத்துப் பரிசளித்தாய்
அதற்குப் பிடித்த இரையின் பெயரை
நீயும் கூறவில்லை.
நானும் கேட்கவில்லை
ஆண்டு பல கடந்தும்
பட்டுப்பூச்சி உடல் இளைத்து
இன்றும்கூட என் நினைவுகளில்
உயிருடன்தான் வாழ்கிறது!
- திருநெல்வேலி, சுடலைமணி

மணிவாசகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE