நிழற்சாலை

By காமதேனு

மழை

கட்டில்களுக்கும்
சோபாக்களுக்கும்
இடமிருக்கும் வீட்டில்
கொட்டும் மழைக்கு
ஒதுங்க இடமற்று
முனகிக்கொண்டிருக்கிறது
பகல்பொழுதில்
மடிகளை
மெத்தையென நினைத்து
தாவிக் குதித்து விளையாடும்
நாய்க்குட்டி!
- நூர்சாகிபுரம், க.துள்ளுக்குட்டி

அது அவள் மழை

என்னை நனைத்த
மழையைப் பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்
மகளிடம்.
கேட்டுக்கொண்டே தூங்கியவள்
அவ்வப்போது தனக்குள்
சிரித்துக்கொண்டாள்.
மழை அவளுக்குள்ளும்
பெய்திருக்கலாம்!
- ராஜபாளையம், நந்தன் கனகராஜ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE