பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

திருநெல்வேலி

நாகர்கோவில் பேருந்தில் இருவர்...
" மக்கா! ஆபரேஷன் பண்ணுன பிறகு கண்ணு எப்படித் தெரியுது?"
" ரொம்ப பளீர்னு தெரியுதண்ணே!"
" இத பண்ணாம ஒரு வருஷமா வச்சிக்கிட்டு திரிஞ்சியே! அப்பவே பண்ணியிருந்தா பிரச்சினையே இல்லாம இருந்திருக்குமே!"
" போங்கண்ணே... பிரச்சினையே இப்பதான் ஆரம்பிச்சிருக்கு. ஆபரேசன் முடிஞ்சு வீட்டுக்குப் போய் ஓய்வா உக்காந்தேன். நமக்குதான் நாக்குல சனியாச்சே... பொண்டாட்டியப் பாத்தேன். ‘முந்திக்கு இப்ப ரொம்பவே நரைச்சிருக்கோ’னு தெரியாம கேட்டுபுட்டேன். ஒரு வாரமா பெரிய போராட்டமா இருக்கு."
நாகர்கோவில், சாதிக் குல்.

சிதம்பரம்

மேல வீதியில் தம்பதியினர்...
"ஏங்க.. வடநாட்டுக்காரங்க பூட்டு வித்துக்கிட்டு போறாங்க, நம்ப வீட்டுக்கு ரெண்டு பூட்டு வாங்கிக்கிட்டு போகலாமே?"
"சுத்த வெவரம் கெட்டவளா இருக்கியே, அவிங்க ஒரு பக்கம் பூட்டு விக்கிறாங்க, மறுபக்கம் பூட்டை உடைச்சி வீடு பூந்து திருடறாங்க, கம்முனு வா"
(மனைவி ஆமோதித்து தலையாட்டி பின் தொடருகிறார்)
- பரங்கிப்பேட்டை, சிவகுமார் நடராஜன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE