தன்பாலின திருமணத்தில் ஒரு சோக முடிவு!

By காமதேனு

கடந்த டிசம்பர் மாதம் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வர.. அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஜோ கிராண்ட், ஜில் கிண்ட் என்ற இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் சட்ட அங்கீகாரத்துடன் திருமணம் செய்துகொண்ட முதல் தன்பாலின இணையர் என்ற பெருமை இவர்களுக்குக் கிடைத்தது. புற்றுநோயால் அவதியுற்றுவந்த கிராண்ட், திருமணமான 48 நாட்களில் இறந்துவிட்டது ஜில் கிண்ட்டுக்கு மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தன்பாலின உறவாளர்களுக்கும் சோகத்தைத் தந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE