கத்திமுனையில் கலகல ஜோக்ஸ்..

By காமதேனு

கத்திமுனையில் நிறுத்திக் கழுத்துல கைவெச்சதா கேட்டுருப்பீங்க.. ஏதோ ஜோலியா போறவங்கள கத்தி முனையில நிறுத்துன மாதிரி நிறுத்தி, “ஒரு ஜோக் சொல்லுங்க பார்ப்போம்”னு கேட்டா எப்படி இருக்கும்.

அப்டி கேட்டதுதான் இந்த ஜோக்ஸ்!

அல்வா சாப்பிட்டேன் ஒடம்பு கொறையல..

சீர்காழி சிங்கம் சாமிநாதன் அப்பத்தான் புதூர் ஜெயராமன் ஓட்டல்ல ஃபுல் கட்டு கட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் செஞ்சாரு. ‘ஸ்டாப்’னு நிறுத்தி விஷயத்தைச் சொன்னோம். வேகமா வாயைத் திறந்தார். சரி... ஜோக்குதான் சொல்ல வாயைத் திறக்காருன்னு பார்த்தா, ‘ஏவ்வ்..’னு ஏப்பத்தைக் கெளப்பினார். “சரி, சரி ஜோக்கு” என்றோம். “நம்மாளு ஒருத்தன் உடம்பக் கொறைக்க யோசன கேட்டு டாக்டர்கிட்ட போயிருக்கான். அவரும் ஏதோ ஒரு வழியச் சொல்லிருக்காரு. ஆனாலும், ஒடம்பு கொறையல. மறுபடியும் டாக்டர்கிட்ட போனவன்,  ‘என்ன டாக்டர்... நீங்க சொன்னபடி அல்வா சாப்பிட்டுட்டு வந்தேன். ஆனா, ஒடம்பு இறங்குனபாடா இல்லியே’ன்னுருக்கான். அதக் கேட்டுத் தலையில அடிச்சுக்கிட்ட டாக்டர், ‘அளவா சாப்பிடுன்னு சொன்னதுக்கு அல்வா சாப்பிட்டேன்னு வந்தா எப்படிப்பா?’ன்னாராம்” சொல்லிவிட்டு பைக்கைக் கிளப்பினார் சாமிநாதன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE