பிரதமர் மோடியின் கல்வித் தகுதி: அர்விந்த் கேஜ்ரிவால் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

By KU BUREAU

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு கேள்வி எழுப்பினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்குறித்து குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் விவரங்களை அளிக்க மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

பிரதமர் மோடிக்கு குஜராத் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டம் குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்த தகவலை தரக்குறைவான கருத்தாக குஜராத் பல்கலைக்கழகம் கருதியது. இதையடுத்து குஜராத் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பியூஸ் படேல், அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் அர்விந்த் கேஜ்ரிவால் நேரில்ஆஜராகி விளக்கம் அளிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் உச்ச நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிரிசிகேஸ் ராய் மற்றும் எஸ்வின் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE