புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.57,120-க்கு விற்பனை

By KU BUREAU

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.57,120-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 25-ம் தேதியன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,060-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கும் விற்பனையானது. இதன்மூலம், தங்கம் விலை ஒரு பவுன் ரூ.56,480-ஆக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.57,120-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.60,760-க்கு விற்பனையாகிறது. இதனிடையே நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,03,000 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE