தீபாவளிக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: அகவிலைப்படி 3% உயர்வு!

By KU BUREAU

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தி, 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பணவீக்கம் காரணமாக உயரும் விலைவாசி உயர்வை ஈடுகட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். அகவிலைப்படியானது சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். முன்னதாக, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE