‘வினேஷ் போகத் செல்லும் இடங்களில் பேரழிவு ஏற்படும்’ - பிரிஜ் பூஷண்

By KU BUREAU

சண்டிகர்: பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் கூறியதாவது: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றது சந்தோஷம்தான். ஆனால் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பேரழிவு ஏற்படுகிறது. வேறு எதுவும் மீதம் இருக்காத அளவுக்கு அளவுக்கு அங்கு பிரச்சினை ஏற்படும். தற்போது கூட ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி கண்டுவிட்டது.

ஹரியானாவில் வாக்குப்பதிவு முடிந்ததும் நடைபெற்ற கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்று கூறி வந்தனர். ஆனால், ஹரியானாவில் கருத்துக்கணிப்பு முற்றிலும் தவறாகப் போய்விட்டது. இப்போது அங்கு தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கிறது. வினேஷ் போகத், முதலில் மல்யுத்த வீரர்களிடையே பேரழிவை ஏற்படுத்தினார். இப்போது காங்கிரஸ் கட்சிக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளார் இவ்வாறு பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE