காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By KU BUREAU

ஸ்ரீநகர்: இ்ந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்பான உளவுத் தகவலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், குகல்தார் பகுதியில் ராணுவ வீரர்களும் மாநில போலீஸாரும் இணைந்து நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடும் சண்டைக்கு பிறகு 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்தது.

சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் உள்ளனரா என தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE