ஷாங்காய் மாநாடு: பாகிஸ்தான் செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்

By KU BUREAU

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா,சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (எஸ்சிஓ) அக்.15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான்செல்வார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE