புனே அருகே ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே நேற்று காலை நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹெரிடேஜ் ஏவியேஷன் நிறுவ னத்துக்கு சொந்தமான அகஸ்டா 109 ரக ஹெலிகாப்டர் புனேவில் உள்ள ஆக்ஸ்போர்ட் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து மும்பை ஜூகுபகுதிக்கு நேற்று காலை புறப்பட்டது. அதில் விமானிகள் கேப்டன் பிள்ளை மற்றும் கேப்டன் பரம்ஜித், விமான பராமரிப்பு என்ஜினியர் ஒருவரும் சென்றனர்.

ஆக்ஸ்போர்ட் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஹெலிகாப்டர் சென்றபோது அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதில் ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE