நாட்டில் புதிதாக 200 விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்

By KU BUREAU

விஜயவாடா: விஜயவாடா விமான நிலையத்தில் விஜயவாடா - டெல்லி இடையே இண்டிகோ விமான சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவையை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: விஜயவாடாவில் இருந்து மற்ற நகரங்களுக்கு விமான சேவையை அதிகரித்துள்ளோம். அக்டோபர் 27-ம் தேதி விசாகப் பட்டினம்-டெல்லி இடையே மேலும் ஒரு விமான சேவையை தொடங்க உள்ளோம். விஜய வாடாவிலிருந்து தற்போது ஷார்ஜாவுக்கு விமான சேவை உள்ளது. இதுபோல் விரைவில் சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கும் விமான சேவை தொடங்கப்படும். நாட்டில் புதிதாக 200 விமான நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE