மகன் பாடம் நடத்தியதால் தலைமை ஆசிரியர் மீது ம.பி.யில் வழக்கு பதிவு

By KU BUREAU

போபால்: மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டம், சோல்னா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை மாவட்டதலைமை கல்வி அதிகாரி சர்மா சோதனை நடத்தினார்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமன் லால் கன்வார் பள்ளியில் இல்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் ராகேஷ் பிரதாப் சிங் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அவரே பள்ளியையும் நிர்வாகம் செய்து வந்துள்ளார். மேலும் 2 சிறப்பு ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவில்லை.

மாவட்ட கல்வி அதிகாரி சர்மாவின் பரிந்துரையின்பேரில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமன் லால் கன்வார், அவரது மகன் ராகேஷ் பிரதாப் சிங் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 2 சிறப்பு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE